ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தங்க விலை

அன்புடையீர் 

அஸ்ஸலாமு அலைக்கும்,

தற்போதைய தங்க  விலை சென்றுள்ள உச்சத்தை நம்முடைய சமுதாய கண்ணோட்டத்தில் நாம் நோக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

 தற்போது நம்முடைய திருமணங்களில், சபையில் வைத்து பதிவாளர்கள் (சங்கம்) பெண் வீட்டாரை பார்த்து பெண்ணுக்கு எத்தனை பவுன்? மாப்பிள்ளைக்கு  எத்தனை பவுன்? என்ற கேள்வியும் அதற்கு அவர்கள் பெண்ணுக்கு   50. பவுன் மாப்பிள்ளைக்கு 15.   பவுன என்றும், 
( இது வெறும் example மட்டும்தான், நடப்பில் இதைவிட அதிகம்) 

மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மகர் அல்லாமல் பெண் வீட்டார் போட்ட 15 பவுனை அப்படியே திருப்பி போடுவதும் வாடிக்கையாக உள்ளது.

 இந்த 65. பவுனுக்கான மதிப்பு இன்று நிலவரப்படி சுமார் 15. லட்சம.

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட  பெண் குழந்தைகள்  இருந்து ஒரு பெண்ணுக்கு 2. வருடம் முன்பு 65. பவுனில் நகை போட்டு இன்றைய சூழலில் அதே 65. பவுன் போடுவது மிகவும் கடினம்,

ஆகையால் கீழ்க்கண்ட தீர்வுகளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன், அது குறித்து  ஆரோக்யமான விவாதம் நடந்து முடிவுக்கு வந்தால் மிக்க சந்தோசம்.

1. சங்க பதிவேட்டில் பவுணின் திருமண நாளின் சந்தை மதிப்பை மட்டும்  பதிவு செய்யும் முறையை மேற்கொள்வது.

2. பெண்  வீட்டினர் மாப்பிள்ளைக்கு பவுன் போடுவதாக பதிவு செய்வதை நிறுத்துவது.

3. பெண்  வீட்டினர்  போடும் பவுனுக்கு உச்ச வரம்பு நியமிப்பது.

4. உச்ச  வரம்பை தாண்டி போடுபவர்கள் அதை சபையில் தெரிவிக்க கூடாது, அது சபை குறிப்பிலும் இடம் பெறாது, சபையில் தெரிவித்தல் அந்த திருமணம் பதிவு செய்ய மறுக்க வேண்டும்.

அன்பு நண்பர்களின் மேலான கருத்துக்களை எதி நோக்கும் 

நாசர்
  
 



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.