அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருளால் நமதூரில் தற்போது (ஆண்) பிள்ளைகள் குறைந்தது ஒரு டிகிரி அல்லது டிப்ளோமா படித்துவிடுகிறார்கள், இது ஒரு நல்ல முன்னேற்றம்.
அடுத்து அவர்கள பொருளீட்ட U A E க்குத்தான் வர வேண்டி உள்ளது, காலம் காலமாக நாம் நமது பொருளாதரத்தை வெளிநாட்டை நம்பித்தான் உள்ளோம். அல்ஹம்திளில்லாஹ் இப்போதுவரை எல்லாம் நன்றாகதான் போய்க்கொண்டுள்ளது ஆனால் நாம் இதோடு திருப்தியாக கூடாது.
படித்த மாணவர்கள் அரசாங்க வேலைகளுக்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்க்கான தேர்வுகளுக்கு தயாராக வேண்டும.
அதற்கென்று உள்ள பல்வேறு மையம்களில் சேர வேண்டும், சில இலவச மையங்களும் http://saidaiduraisamysmanidhaneyam.com/ , ஏராளமான தனியார் பயிற்சி மையங்களும் உள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில முகவரிகள அரசு பரீட்சைகளின் இணய தளங்கள், இதில் ஏகப்பட்ட தகவல்கள் உள்ளன,
http://www.upsc.gov.in/
http://www.tnpsc.gov.in/
http://ssc.nic.in/
நாம் செய்ய வேண்டியவை:-
ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கீழ்க்கண்ட முயற்சிகளை செய்யலாம்.
மேற்கூறப்பட்ட பரிட்சைகளைபற்றியும் அதன் பணியிடங்கள் பற்றி நம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குவது (நோட்டீஸ் )
பொது இடம் ஒன்றில் இதற்கான தகவல்கள் திரட்டி அளிப்பது
(எப்போது தேர்வு அறிவிப்பு வருகிறது, எங்கே விண்ணப்பம் செய்வது, எங்கே பயிற்சி கிட்டும் என்பது போன்ற செய்திகளை வெளியிடவேண்டும்.)அந்த பொது இடத்தில பல்வேறு பரிட்சைகளுக்கான புத்தகங்கள், வழிகாட்டிகள், கம்ப்யூட்டர் மற்றும் விண்ணப்பங்களை தயார் நிலையில் வைத்திருப்பது.
ஊரில் உள்ள படித்த, இது குறித்த அறிவு உள்ள நண்பர்களை அணுகி அவர்களின் தொடர் பங்களிப்பை இந்த மையத்துக்கு வேண்டுவது,
நமதூரில் ஏற்கனவே இரண்டு சங்கங்களும், அவற்றுக்கு மொத்தம் நான்கு கட்டிடங்களும் உண்டு,
சமுதாய முன்னேற்றத்துக்கு மேற்படி சங்கங்கள் நிச்சயம் உதவும், நிர்வாகிகளை அணுகி அவர்களின் சம்மதத்தை பெற்று இந்த மையத்தை அங்கே நிறுவுவது.
அன்பு நண்பர்களின் மேலான கருத்துக்களையும், ஒத்துழைப்பையும் எதிநோக்குகிறேன்
நன்றியுடன்
நாசர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக